ஜேவிபியின் போராட்டம் தனிநாட்டுக்கானதாக இருக்கவில்லை! அது வேறு இது வேறு என்கிறார் இராணுவதளபதி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, September 21, 2018

ஜேவிபியின் போராட்டம் தனிநாட்டுக்கானதாக இருக்கவில்லை! அது வேறு இது வேறு என்கிறார் இராணுவதளபதி!!

வடக்கில் படைத்­த­ரப்­பா­னது கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள பொது மக்­க­ளது காணி­களை மீள மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு ஏற்ற வகையில் படைத் தரப்­பி­ன­ரது முகாம் மற்றும் படைக்­க­லன்­களை இட­மாற்றம் செய்­வ­தற்கு தேவைப்­படும் பணத்தை அரசாங்கம் வழங்­கு­மாயின் ஆறு மாத காலத்தில்  மக்­களின் நிலங்­களை மீள கைய­ளிப்­ப­தற்கு தாம் தயா­ராக இருப்­ப­தாக யாழ்.மாவட்ட இரா­ணுவ கட்­டளை தள­பதி தர்ஷன ஹெட்­டி­யா­ரச்சி தெரி­வித்­துள்ளார். 


தெற்கில் ஜே.வி.பி யினர் போரா­டிய காலத்­திலும் அவர்கள் தனி நாட்­டினை கோர­வில்லை. ஆனால் தனி­நாடு கோரிய போராட்­ட­மா­னது வடக்­கி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. தற்­போதும் புலம்­பெயர் மக்கள் அதனை செயற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் உற்­சா­க­மாக உள்­ளார்கள். எனவே தான் வடக்­கினை தொடர்ந்து இரா­ணுவம் கண்­கா­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.
யாழ்ப்­பாணம் பலா­லியில் அமைந்­துள்ள இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் நேற்­றைய தினம்  இடம்­பெற்ற விஷேட செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்­க­ளது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
இந்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­பட்டு வரு­கின்­றனர். வடக்­கிற்கு பல்­வேறு தட­வை­களில் விஜயம் செய்த ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் இங்கு இடம்­பெறும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை அவ­தா­னித்து சென்­றி­ருக்­கின்­றனர். இது தவிர தற்­போது வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி செய­லணி ஒன்­றையும் ஜனா­தி­பதி அமைத்­துள்ளார்.
இவ்­வாறு வடக்கின் அபி­வி­ருத்­தி­களில் இரா­ணு­வமும் கவனம் செலுத்தி வரு­கின்­றது. நாம் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை இங்கு செய்து வரு­கின்றோம். எதிர் காலத்­திலும் பல்­வேறு வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். இவற்றை நாம் யாரையும் ஏமாற்ற செய்­ய­வில்லை. நாம் உண்­மை­யா­கவே இதனை செய்­கின்றோம். இத்­த­கைய வேலைத் திட்­டங்­களை செய்­து­விட்டு பின்னர் இதனை காண்­பித்து அர­சி­யலில் இறங்கும் எண்­ணமும் எமக்கு இல்லை.
நீண்ட கால அழி­வு­களில் இருந்து மீண்ட மக்­க­ளுக்கு நல்ல பொரு­ளா­தார ரீதி­யி­லான கட்­ட­மைப்­புடன் கூடிய வாழ்க்­கையை வழங்க வேண்டும் என்­ப­தற்­காவே நாம் இதனை மனப்­பூர்­வ­மாக செய்து வரு­கின்றோம். நாம் கூறு­வதை கேளுங்கள். நாம் சொல்லும் சரி­யான விட­யங்­களை மக்­க­ளுக்கு சொல்­லுங்கள். நாம் தவ­றி­ழைக்கும் போது அதனை செய்­தி­யாக வெளி­யி­டு­வ­தற்கு நாம் தடை­யாக இல்லை.
வடக்கில் உள்ள மக்­களும் எமது மக்­களே. ஒரு முறை ஓர் செவ்­வி­யொன்றில் இதனை நான் குறிப்­பிட்­டி­ருந்தேன். வடக்­கி­லுள்ள மக்­க­ளது பிரச்­சி­னை­களை நாம் தீர்த்து வைக்க வேண்டும். எமது மனதில் வைராக்­கி­யங்­களை வைத்து செயற்­ப­டக்­கூ­டாது என்­பதை தெற்கு மக்­க­ளுக்கு ஒர் தொலைக்­காட்சி செவ்­வியின் போது குறிப்­பிட்டேன். இரா­ணு­வமும் மனி­தர்­களே. நாம் சீரு­டையில் இருக்­கின்றோம். நீங்கள் சிவிலில் இருக்­கின்­றீர்கள். இதுவே வித்­தி­யாசம் என்றார்.
கேள்வி : இரா­ணு­வத்­தினர் மக்­க­ளது காணி­களை மீள கைய­ளிப்­பதில் ஆரம்­பத்தில் அதி­க­ளவில் காணி­களை விடு­வித்த போதும் தற்­போது அதன் அளவு குறைந்­துள்­ளதே ? ஏன் இவ்­வாறு தாம­த­மா­கின்­றது ?
பதில் : இரா­ணு­வத்­தினர் மக்­களின் நிலங்­களை விடு­விப்­பதில் நாட்டின் பாது­காப்­பி­னையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.  இதற்கு முன்னர் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களில் அதி­க­ள­வான பாது­காப்பு பிரச்­சினை இருக்­க­வில்லை. தற்­போது மீத­மா­க­வுள்ள பகு­தி­களில் அதி­க­ளவு பாது­காப்பு தேவை இருக்­கின்­றது.
இவை தவிர யாழில் தற்­போது ஆவா குழு போன்ற பல குழுக்கள் மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் உள்­ளது.  எனவே இவை தொடர்­பிலும் மற்றும் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பிலும் கவனம் செலுத்­தியே இந் நிலங்­களை விடு­விக்க முடியும்.
கேள்வி : இரா­ணுவம் முன்னால் போரா­ளி­களை கண்­கா­ணிப்­பதால் அவர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டுள்­ளதே ?
பதில் : முன்னால் போரா­ளிகள் 5ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இது தொடர்­பாக அர­சாங்­கத்தால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.
கேள்வி : தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் எதேனும் நிலைமை யாழில் உள்­ளதா ?
பதில் : மக்­க­ளிற்கு அச்­சு­றுத்­த­லான குழுக்கள் உள்­ளன. இவற்றை நாம் கவ­னிக்­காது படை முகாம்­களை அகற்­றினால் அவர்கள் அந்த இடங்­க­ளுக்கும் சென்று அச்­சு­றுத்தல் செய்­வார்கள். எனவே இவற்­றையும் அவ­தா­னித்து தான் நாம் எமது நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும்.
கேள்வி : யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவம் விடு­வித்­துள்ள காணிகள் எவ்­வ­ளவு ? இன்னும் விடு­விக்­கப்­பட வேண்­டிய காணி எவ்­வ­ளவு ?
பதில் : யாழில் 25,986.67 ஏக்கர் கைய­கப்­ப­டுத்­தப்­பட நிலையில் அவற்றில் 23,078.36 ஏக்கர் நிலம் மீள கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இன்னும் விடு­விக்­கப்­ப­டாத நில­மாக 2880.08 ஏக்கர் நிலமே உள்­ளது. இதில் அரச காணிகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தின் மொத்த நிலப்­ப­ரப்பில் 1.39 வீத­மான நிலமே படைத்­த­ரப்பு வசம் உள்­ளது. மேலும் விரைவில் 500 ஏக்கர் காணிகள் மீள மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.
கேள்வி : அவ்­வாறு விடு­விக்க தீர்­மா­னித்­துள்ள பகு­திகள் எவை ?
பதில் : இரா­ணுவ சிறு சிறு முகாம்கள் பல வெவ்­வேறு இடங்­களில் உள்ள நிலையில் அவற்றை அங்­கி­ருந்து அகற்றி தலை­மை­ய­கத்­திற்கு கொண்டு வந்த பின்­னரே அவற்றை விடு­விக்­க­வுள்ளோம். எனவே தற்­போது அது தொடர்­பான சரி­யான தக­வல்­களை கூற முடி­யா­துள்­ளது.
கேள்வி : குடா­நாட்டில் படைத்­த­ரப்பு வச­முள்ள மக்­க­ளது காணி­களை மீள கைய­ளிக்க எவ்­வ­ளவு காலம் தேவை ?
பதில் : மக்­க­ளது காணி­களில் உள்ள படை­க­லன்­களை படை முகாம்­களை அகற்றி அவற்றை இட­மாற்றம் செய்­வ­தற்கு தேவைப்­படும் பணத்தை அர­சாங்கம் வழங்­கினால் ஆறு மாத காலத்­தி­லேயே அந் நிலங்­களை விடு­விக்க தயா­ரா­க­வுள்ளோம்.
கேள்வி : அவ்­வா­றாயின் நீங்கள் கோரி­யி­ருக்கும் பணம் எவ்­வ­ளவு ?
பதில் : அது ஒவ்­வொரு படை முகா­மிற்கு ஒவ்­வொரு வித­மாக காணப்­படும்.
கேள்வி : அப்­ப­டி­யா­யினும் தலை­மைப்­பீடம் என்ற வகையில் உங்­க­ளிடம் அதன் கணக்­கீடு இருக்­கு­மல்­லவா ?
பதில் : அனைத்து படை முகாம்­களின் அகற்­று­வ­தற்­கான பணத்தின் தொகை பெறப்­பட்டு உங்­க­ளிற்கு ஒரு சில நாட்­களில் அறியத் தரு­கின்றேன்.
கேள்வி : தொல்­லியல் ஆதா­ர­மான யாழ்ப்­பாணம் கோட்­டையை இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே ?
பதில் : அக் கோட்­டையை முழு­மை­யாக இரா­ணு­வத்­திடம் வழங்­கினால் அங்கு எமது படை முகாம்­களை நகர்த்தி விட்டு பொது மக்­க­ளது காணி­களை விடு­விக்க கூடி­ய­தாக இருக்கும். இது தொடர்­பாக நாம் தொல்­லியல் திணைக்­க­ளத்­துடன் பேசி வரு­கின்றோம்.
கேள்வி : வடக்கு மாகாண சபையும் யாழ்ப்­பா­ணத்தின் சில உள்­ளூ­ராட்சி சபை­களும் யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவம் ஈடு­ப­டக்­கூ­டாது என தீர்­மானம் நிறை­வேற்­றிய போதும் நீங்கள் தொடர்ந்தும் மக்­க­ளுக்­கான சிவில் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கின்­றீர்­களே ?
பதில் : நாம் செய்­வ­தனை யார் கூறி­னாலும் நிறுத்த போவ­தில்லை. அது மக்­க­ளுக்­கான தேவை. எனவே யார் கூறி­னாலும் நாம் அதனை நிறுத்த மாட்டோம்.
கேள்வி : வடக்கில் வாள்­வெட்டு குழுக்­களே உள்ள நிலையில் தெற்­கி­லேயே துப்­பாக்கி சூட்டு சம்­ப­வங்கள் போன்­றன இடம்­பெ­று­கின்­றன. ஆனால் வடக்­கி­லேயே தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றதே ?
பதில் : அவ்­வாறு காணப்­பட்­டாலும் ஆயுத ரீதி­யான போராட்டம் என்­பது வடக்­கி­லேயே தோற்றம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற முப்பதாண்டு கால போராட்டம் காரணமாக வடக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இங்கு அதிகளவு கவனத்தை வைத்துள்ளோம்.
கேள்வி : ஆனால் தெற்கிலும் ஜே.வி.பி போன்ற போராட்டங்கள் இடம்பெற்றிருந்தனவே. அதன் பின்னர் அதில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததே ?
பதில் : ஜே.வி.பி யினர் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லையே. தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்த போராட்டம் வடக்கிலேயே ஆரம்பமாகியது. தற்போதும் கூட புலம்பெயர்ந்துள்ளவர்களில் சிலர் இக் கோரிக்கையை செயற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்கள். எனவே தான் வடக்கினை நாம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad