விரி­வு­ரை­யா­ளரின் மர­ணம் கொலையா? தற்கொலையா? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, September 24, 2018

விரி­வு­ரை­யா­ளரின் மர­ணம் கொலையா? தற்கொலையா?

விசாரணைகள் தொடர்கின்றன
திரு­கோ­ண­ம­லையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் விரி­வு­ரை­யாளர் நீரில் மூழ்­கி­ய­மையால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலே மரணம் சம்­ப­விப்­ப­தற்­கான காரணம் என பிரேத பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.
கிழக்கு பல்­க­லை­க்க­ழ­கத்தின் திரு­கோ­ண­மலை வளா­கத்தில் பணி­யாற்­றிய விரி­வு­ரை­யா­ள­ரான செந்­தூரன் போத­நா­யகி என்­பவர் நேற்று முன்­தினம் திரு­கோ­ண­மலை சங்­க­மித்த கடற் பகு­தியில் சட­லா­மாக மீட்­கப்­பட்­டி­ருந்தார்.
இந்­நி­லையில் இச் சடலம் தொடர்­பான பிரேத பரி­சோ­தனை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் விரி­வு­ரை­யா­ளரின் விஷேட சட்ட வைத்­திய நிபுணர் உ. .மயூ­ரதன் தல­மையில் நேற்று மாலை 4 மணி­ய­ளவில் இடம்­பெற்­றது. 
சுமார் ஒரு மணி நேரம்­இ­டம்­பெற்ற பிரேத பரி­சோ­த­னையின் போது குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் , குறித்த பெண் இரண்டு அல்­லது மூன்று மாத கர்ப்­பி­ணி­யாக இருந்­த­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.
இதே­வேளை இது கொலையா அல்­லது தற்­கொ­லையா என்­பது தொடர்­பாக எதுவும் கூற­மு­டி­யாத நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணையூடாகவே உண்மை கண்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது .இதனிடையேமேற்­படி விரி­வு­ரை­யா­ள­ரான நட­ராசா போத­நா­ய­கியின் மர­ணத்தில் சந்­தேகம் நில­வு­வ­தாக உயி­ரி­ழந்த பெண்ணின் உற­வி­னர்கள் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
இதே­வேளை அந்தப் பெண் மூன்று மாத கர்ப்­பிணி என பொலி­ஸாரின் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
வவு­னி­யாவின் தெற்­குப்­ப­கு­தியில் ஆசி­குளம் எனும் கிரா­மத்­தினை அண்­டிய கற்­குளம் கிரா­மத்தைச் சேர்ந்­தவர்
இவர். மூன்று பெண் பிள்­ளை­க­ளையும் 3 ஆண் பிள்­ளை­க­ளையும் கொண்ட நட­ரா­சாவின் குடும்­பத்தில் ஐந்­தா­வது பெண் பிள்ளை போத­நா­யகி.
இளம் வய­தி­லேயே கல்­வி­யிலும் விளை­யாட்­டுத்­து­றை­யிலும் தனது ஆளு­மையை வெளிப்­ப­டுத்­திய போத­நா­யகி சாதா­ர­ண­தரம் வரை சிதம்­ப­ர­புரம் நட­ராஜா வித்­தி­யா­ல­யத்தில் தனது கல்­வியை முடித்து கோம­ர­சன்­குளம் மகா­வித்­தி­யா­ல­யத்தில் தமது உயர்­கல்­வியை தொடர்ந்­தி­ருந்தார்.
அங்கும் தனது ஆளு­மையை வெளிப்­ப­டுத்­திய இவர் கலைப்­பி­ரிவில் சிறந்த பெறு­பேற்­றைப்­பெற்று கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் திரு­கோ­ண­மலை வளா­கத்தில் ஊடகம் மற்றும் தொடர்­பாடல் துறையில் தனது மேற்­ப­டிப்பை தொடர்ந்­தி­ருந்தார்.
வவு­னியா ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் தனது தொழில் முயற்­சியில் கால்­ப­தித்த போத­நா­யகி 2016 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் தான் கற்ற திரு­கோ­ண­மலை வளா­கத்தில் விரி­வு­ரை­யா­ள­ரா­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­த­மை­யினால் அங்கு விரி­வு­ரை­யா­ள­ராக தொழில் புரிந்து வந்தார்.
இந்­நி­லை­யி­லேயே ஒட்­டுச்­சுட்­டானை சேர்ந்த செந்­தூரன் என்­ப­வரை 6.04.2018 அன்று கைப்­பி­டித்தார்.
இவ­ரிடம் அமை­தி­யான சுபா­வமும் யாரு­டனும் அள­வுக்­க­தி­க­மாக பேசாத குணமும் உத­வ­வேண்டும் என்ற மனோ நிலையும் நிறைந்­தி­ருந்­த­தாக கூறும் இவ­ரது தோழிகள் போத­நா­ய­கியின் இழப்பை தாங்­கிக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும் நம்­ப­மு­டி­யா­த­வர்­க­ளா­கவும் உள்­ளனர்.
தான் சார்ந்­த­வர்­க­ளுக்கு கூட தன்னால் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டாது என எண்ணும் போத­நா­யகி ஒரு தனிமை விரும்பி என அவ­ரது உற்ற நண்பி தெரி­வித்­தி­ருந்தார்.
மூன்று மாத கர்ப்­பி­ணி­யாக உள்ள போத­நா­யகி 19 ஆம் திகதி தனது சக விரி­வு­ரை­யா­ள­ரிடம் வைத்­தி­யரை சந்­திக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் அதனால் தான் பேருந்தில் வவு­னி­யா­விற்கு செல்­ல­வுள்­ள­தா­கவும் தெரி­வித்து மதி­ய­ம­ளவில் திரு­கோ­ண­மலை வளா­கத்தில் இருந்து சென்­றுள்ளார்.
இதன்­போது அவர் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றில் ஏறி பய­ணிப்­பதை வளா­கத்தின் காவ­லாளி கண்­டுள்ளார். எனினும் வீடு வந்து சேரா­ததால் அவ­ரது வரு­கையை எதிர்­பார்த்­தி­ருந்த குடும்­பத்­தி­ன­ருக்கு ஏமாற்­ற­மாக இருந்­துள்­ளது.
நோய்­வாய்ப்­பட்ட தந்தை, சிறு­நீ­ரகப் பாதிப்­புக்­குள்­ளான தாய் என்ற நிலையில் எதிர்­பார்த்­தி­ராத துன்­பியல் சம்­ப­வ­மொன்று அந்தக் குடும்­பத்­துக்கு ஏற்­படும் என எவரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.
வீட்­டுக்கு வரு­கின்றேன் என தொலை­பே­சியில் தகவல் தெரி­வித்­தி­ருந்த விரி­வு­ரை­யாளர் இர­வா­கியும் வீட்­டுக்கு வரா­மை­யினால் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­ட­போ­திலும் அவரின் தொலை­பேசி நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதனால் சந்­தேகம் கொண்ட குடும்­பத்­தினர் செய்­வ­த­றி­யாது திகைத்­தனர். இந் நிலையில் திரு­கோ­ண­ம­லையின் சங்­க­மித்தை கடற்­க­ரையில் பெண்­ணொ­ரு­வரின் பாத­ணி­களும் கைப்­பையும் காணப்­ப­டு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வலின் அடிப்­ப­டையில் பொலிஸார் குறித்த இடத்­திற்கு சென்று கைப்­பையை கைப்­பற்றி சோத­னை­யிட்­ட­போது அது திரு­கோ­ண­மலை வளா­கத்தின் விரி­வு­ரை­யா­ள­ரொ­ருவர் என்ற அடை­யா­ளத்­தினை கண்­ட­றிந்து கொண்­டனர்.
இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவர்கள் வளா­கத்­துடன் தொடர்­பு­கொண்­ட­போது அவர் வளா­கத்தில் இருந்து சென்ற விடயம் தெரி­ய­வ­ரவே குறித்த சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் தீவிர தேடு­தலில் ஈடு­பட்­டனர். இதன்­போது பெண்­ணொ­ரு­வரின் சடலம் கடற்­க­ரை­யோ­ர­மாக மிதப்­பதை அவ­தா­னித்­தனர்.
குறித்த சடலம் விரி­வு­ரை­யா­ள­ரு­டை­ய­துதான் என சந்­தே­கித்த பொலிஸார் அது­பற்றி வளா­கத்­திற்கு அறி­வித்­த­துடன் அவர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கும் அறியச் செய்­தி­ருந்­தனர்.
வவு­னியா ஆசி­குளம் கற்­கு­ளத்தில் வசிக்கும் குடும்­பத்­தினர் குறித்த தக­வலை, போத­நா­ய­கியின் கண­வ­ருக்கும் வழங்­கி­ய­துடன் திரு­கோ­ண­ம­லைக்கும் விரைந்­தனர்.
அங்கு சட­லத்­தினை கணவர் மற்றும் குடும்­பத்­தினர் அடை­யாளம் காட்­டி­யதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போதநாயகியின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருக்கும் நிலையில் போதநாயகியின் சகோதரரின் வாக்குமூலத்தில் சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது ஒரு கொலையாக இருக்கலாமா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதேவேளை யாழ். வைத்தியசாலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad