முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டத்தாரி நியமனம்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, August 21, 2018

முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டத்தாரி நியமனம்!

முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டத்தாரிகள் நியமனம் வழங்கப்பட்டுள்ளமையானது மகிழ்ச்சியளிப்பதாக வடக்கு ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 30 பேருக்கான அரச நியமனங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பில் வைத்து வழங்கி வைத்துள்ளார்.


இது குறித்து தனது மகிழ்சியை தெரிவித்து அவர்அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலிகள் அமைப்பிலிருந்து இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டனர்.

அவர்களில் பட்டதாரிகளாக காணப்பட்ட பலர் கடந்த 2017 ஆரம்பத்தில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் என்னை சந்தித்து ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

அதாவது பட்டதாரிகளுக்கான அரச பணிநியமனங்களில் தமது பெயர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதாகும். அதற்கு அமைய கடந்த 2017.07.26 அன்று அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுக்கு நான் எழுத்து மூலம் ஆலோசனை முன்வைத்தேன்.

இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், அமைச்சரவை பத்திரத்தினை முன்வைத்து நிறைவேற்றி இப்போராளிகளுக்கும் நேற்று அரச பணி நியமனத்தினை வழங்கியிருக்கின்றார். அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வுபெற்ற போராளிகள் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு அரசபணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.

மேலும் இரண்டாம் கட்டமாக நேற்றய தினம் 30 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரச பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

சமாதானத்திற்கு இது ஒருமுன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது. இதுபோன்று மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச சேவைகள் கிடைக்க எனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad