நாயாறில் தமிழ் மீனவர்களின் 8 மீன் வாடிகள் தீக்கிரை - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 15, 2018

நாயாறில் தமிழ் மீனவர்களின் 8 மீன் வாடிகள் தீக்கிரை

முல்­லைத்­தீவு, நாயாறு பகு­தியில் நேற்­று  முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் தமிழ்  மீன­வர்­களின் 8 மீன் ­வா­டிகள் தீக்­கி­ரை­யாக்கப்  பட்­டுள்­ள­மை­யினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ளது. தென்­ப­குதி மீன­வர்கள் முல்  லைத்­தீவு கடற்பகு­தியில் அத்­து­மீறி சட்ட  விரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு  பட்டு வரு­வதன் கார­ண­மாக உள்ளூர் மீன­வர்­க­ளுக்கும்  
தென்­ப­குதி மீன­வர்­க­ளுக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்து வரும் நிலையில் தமிழ் மீன­வர்­க­ளது மீன்­வா­டிகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன.
தென்­ப­குதி மீன­வர்கள் முல்­லைத்­தீவு கடற்­ப­கு­தியில் அத்­து­மீறி சுருக்கு வலையை பயன்­ப­டுத்­தியும் ஒளிப் பாய்ச்­சியும் சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இத்­த­கைய சட்­ட­வி­ரோத மீன்­படி நடிக்­கை­யினை நிறுத்­து­மா­று­கோரி உள்ளூர் மீன­வர்கள் கடந்த 02ஆம் திகதி முல்­லைத்­தீவு கடற்­றொழில் நீரி­யல்­வள திணைக்­க­ளத்தை முற்­று­கை­யிட்டு போராட்டம் நடத்­தி­ய­துடன் கடந்த 10 தினங்­க­ளாக கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­திலும் ஈடு­பட்டு வந்­தனர்.இத­னை­ய­டுத்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீன்­பிடி துறை அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா முல்­லைத்­தீ­வுக்கு விஜயம் செய்து சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­யினை நிறுத்­து­வ­தாக உறு­தி­மொழி வழங்­கி­யதை அடுத்து உள்ளூர் மீன­வர்கள் தமது போராட்­டத்தை கைவிட்­டி­ருந்­தனர்.
இந்த நிலையில் நேற்று முன்­தினம் மாலை 6 மணி­ய­ளவில் தென்­ப­குதி மீன­வர்கள் சட்­ட­வி­ரோ­த­மாக ஔிப்­பாய்ச்சி மீன்­பி­டிப்­ப­தற்­கென கட­லுக்குச் சென்­ற­போது அவர்­க­ளது பட­கு­களை நாயாற்றுப் பகுதி தமிழ் மீன­வர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்­பி­யுள்­ளனர். இந்தச் சம்­ப­வத்தை அடுத்து இரு­த­ரப்­புக்­கு­மி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இதன் பின்­ன­னி­யி­லேயே நாயாற்று 8 தமிழ் மீன­வர்­க­ளது மீன்­வா­டிகள் நேற்று முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளது.
இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் வாடி­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தீ முழு­மை­யாக பரவி 8 வாடி­களும் தீயில் எரிந்து முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளன. இதனைால் இப்­ப­குதி மீன­வர்கள் மத்­தியில் பெரும் பதற்றம் நிலவி வரு­கின்­றது. இந்த தீ வைப்புச் சம்­ப­வத்­தின்­போது படகு ஒன்றும் மூன்று என்­ஜின்­களும் பெரு­ம­தி­யான வலை­களும் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.
சம்­ப­வத்தை அடுத்து பொலி­ஸாரும் தீய­ணைப்பு பிரி­வி­னரும் சம்­பவ இடத்­துக்கு விரைந்து எரிந்­து­கொண்­டி­ருந்த மீன்­வா­டி­களை அணைக்க முற்­பட்­டி­ருந்­த­போதும் அந்த முயற்சி பய­ன­ளிக்­க­வில்லை. இதனால் மீன்­வா­டிகள் முழு­மை­யாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளன. இந்தச் சம்­பவம் தொடர்பில் பொலிஸார் விசா­ரை­ண­களை நடத்தி வரு­கின்­றனர். சம்­ப­வத்தை கேள்­வி­யுற்ற வட மாகா­ண­சபை உறுப்­பினர் ரவி­கரன் உட்­பட பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­திற்கு வந்து மீன­வர்­க­ளுக்கு ஆறுதல் கூறி­யுள்­ளனர்.
இதே­வேளை நேற்­றுக்­காலை பிரதி அமைச்சர் காதர் மஸ்­தானும் சம்­பவ இடத்­திற்கு விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யிட்­டுள்ளார்.
இதே­வேளை பட­குகள் வலைகள் வாடிகள் என்­பன எரிக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் மூன்று மீன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதாகிய சந்தேக நபர்கள் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் நேற்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 8 படகுகளுடன் 27 வெளிமாவட்ட மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad