அரசாங்கத்திலிருந்து டிசம்பர் 31 அன்று வெளியேறுவோம் - ரெலோ தீர்மானம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 1, 2018

அரசாங்கத்திலிருந்து டிசம்பர் 31 அன்று வெளியேறுவோம் - ரெலோ தீர்மானம்

டிசம்பர் மாதம் 31ஆம் திக­திக்கு முன்னர் அர­சியல் கைதிகள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்­ப­துடன் அர­சியல் தீர்­வொன்­றை முன்­வைப்­ப­தற்கு தவறும் பட்­சத்தில் அர­சாங்­கத்­திற்­கான ஆத­ர­வினை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும் என்று காலக்­கெடு விதித்து தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் 10ஆவது தேசிய மாநாட்டின் போது தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. 
பாது­காப்பு படை­யி­ன­ருக்­கான செல­வி­னங்கள் என்­பது தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்­தி­ர­மில்­லாமல் சிங்­கள மக்­க­ளையும் பாதிக்கும் வகையில் தேசிய பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்கம் ஏற்­ப­டு­வ­தையும் கருத்திற் கொண்டு எதிர்­வரும் வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்கக் கூடாது எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
தமிழ் ஈழ விடு­தலை இயக்­க­மான ரெலோ இயக்­கத்தின் 10ஆவது தேசிய மாநாடு மட்­டக்­க­ளப்பு அமொிக்க மிசன் மண்­ட­பத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.
இயக்­கத்தின் தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தவி­சா­ள­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாட்­டி­லேயே இவ்­வாறு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
அவை வரு­மாறு,
அர­சியல் தீர்­வுத்­திட்­ட­மொன்­றினை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திக­திக்கு முன்னர் முன்­வைக்க அர­சாங்கம் தவறும் பட்­சத்தில் அர­சாங்­கத்­திற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பால் அளிக்­கப்­பட்டு வரும் ஆத­ர­வினை முடி­வு­றுத்த வேண்டும்
தமி­ழி­னத்தின் தாய­கத்தில் யுத்தம் முடி­வு­றுத்­தப்­பட்டு 9 ஆண்­டுகள் கடந்து விட்ட போதிலும் நியா­ய­மான கார­ணங்கள் எது­வு­மின்றி வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் ஒரு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட அரச படை­யினர் ஆக்­கி­ர­மித்து நிலை கொண்­டி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதை மீண்டும் பிர­க­ட­னப்­ப­டுத்தி படைக்­கு­றைப்பு என்­பது திட்­ட­வட்­ட­மா­னதும் நீதி­யா­ன­து­மான கால வறை­ய­றைக்குள் அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி 1981ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு படை­களின் பிர­சன்­னத்தை மட்­டுப்­ப­டுத்த வேண்டும்.
மேலும் வட கிழக்கில் அரச படைகள் தொடர்ந்து பாரிய எண்­ணிக்­கையில் ஆக்­கி­ர­மிப்பு படை­க­ளாக நிலை கொண்­டி­ருப்­ப­தையும் பாது­காப்பு படை­யி­ன­ருக்­கான செல­வி­னங்கள் என்­பது தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்­தி­ர­மில்­லாமல் சிங்­கள மக்­க­ளையும் பாதிக்கும் வகையில் தேசிய பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்கம் ஏற்­ப­டு­வ­தையும் கருத்திற் கொண்டு எதிர்­வரும் வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்கக் கூடாது எனவும் இம்­மா­நாடு கோரு­கின்­றது.
தமிழ் அர­சியல் கைதிகள் 107 போ் பல வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து முற்­றாக நீதி விரோ­த­மா­னது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­தோடு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் 12000க்கு மேற்­பட்ட தமிழ் கைதி­க­ளுக்கு மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் புனர்­வாழ்­வ­ளித்து விடு­தலை செய்­த­தையும் இதே சூழ் நிலையில் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­திலே மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் பல் வேறு சாட்­டுக்­களை தொிவித்து மனி­தா­பி­மா­ன­மின்றி இப் பிரச்­சி­னை­களை கையாள்­வதைக் கண்­டிப்­ப­தோடு கால­தா­ம­த­மின்ற எதிர்­வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திக­திக்கு முன்னர் அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் விடு­தலை செய்ய வேண்டும் என இந்த மாநாடு அர­சாங்­கத்தைக் கோரு­கின்­றது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வௌியே நின்று செயற்­பட்டு வரும் தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒன்­று­பட்டு ஒரே அணி­யாக செயற்­ப­டு­வதன் மூலமே ஒன்­று­பட்ட தமிழ் தேசிய அர­சியல் பலத்தின் ஊடாக எம்­மி­னத்தின் குறிக்­கோ­ளான அர­சியல் சுதந்­தி­ரத்தை வென்­னெ­டுக்க முடியும் என்­பதை வலி­யு­றுத்­தியும் இலங்கை தீவின் அர­சியல் தீர்­வாக ஒற­றுமை என்ற கட்­ட­மைப்­புக்குள் உறு­தி­யா­னதும் இறு­தி­யா­ன­து­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டாய தேவை­களை கருத்திற் கொண்டு அத்­த­கைய அர­சியல் போராட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரே அணி­யாக அணி திரள முன் வரு­மாறும் தமிழ் தேசி­யத்­தினை முன் நிறுத்தி நிற்கும் சகல அர­சியல் கட்­சிகள் சமூக அமைப்­புக்­க­ளையும் இந்த மாநாடு அறை கூவி அழைக்­கின்­றது.
மேலும் நியா­ய­மா­னதும் யதார்த்த புர்­வ­மா­ன­து­மான கால வரை­ய­றைக்குள் எம்­மி­னத்தின் அர­சியல் தீர்­வாக ஒரு­மைப்­பாட்­டுக்குள் பெவன்­றெ­டுக்க சாத்­தி­ய­மில்­லாத விடத்து எமது பிரச்­சி­னையை உலக அரங்கின் முன் சமர்ப்­பித்து தனித் தமிழ் தேசிய இனம் என்ற அடிப்­ப­டையில் எம்­மி­னத்தின் பிறப்­பு­ரி­மை­யான சுய நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் உலக நாடு­களின் மன்­ற­மான ஐக்­கிய நாடுகள் சபையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை வட­கி­ழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்­தி­யிலும் வௌிநா­டு­க­ளுக்கு சென்று அங்கு வாழும் தமி­ழர்கள் மத்­தி­யிலும் நடத்த வேண்டும் என்ற அர­சியல் தீர்­மா­னத்தை செலாக்க அனைத்து தமிழ் தேசிய சக்­தி­களும் முன் வர­வேண்டும் என்றும் இம் மாநாடு தீர்­மா­னிக்­கின்­றது.
போர்க்­குற்ற விசா­ரணை விட­யத்தில் தமிழ் இனத்தின் தரப்பில் எந்த வித­மான விட்டுக் கொடுப்­புக்கோ சம­ர­சத்­திற்கோ இட­மில்லை என்­பதை திட்­ட­வட்­ட­மாக தொிவித்து இத் தேசிய மாநாடு ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் மன்­றத்தில் இலங்கை ஏற்றுக் கொண்ட கடப்­பா­டு­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் காலம் கடத்­தாமல் நிறை­வேற்­றியே ஆக வேண்டும் என்­பதை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் மன்றம் வலி­யு­றுத்தி உறு­திப்­ப­டுத்த வேண்டும்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள் இலங்கை அர­சாங்கம் தனது கடப்­பா­டு­களை ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை அமுல் படுத்த தவறுமிடத்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று இம்மாநாடு ஐக்கிய நாடுகள் சபையை கோருகின்றது என்ற தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், உப தலைவர்களான பிரச்சனா இந்திரகுமார், ஹென்ரி மோகன், பொருளாளர் கோவிந்தன் கருணாகரன் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் தவிசாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad