கட்சிதாவக் கொடுப்பது லஞ்சமல்ல அது சன்மானம் - வாசு - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, November 6, 2018

கட்சிதாவக் கொடுப்பது லஞ்சமல்ல அது சன்மானம் - வாசு

கட்சி மாறு­தல் என்­பது சாதா­ரண விட­யம். அதற்­காக யாருக்­கா­வது சன்­மா­னங்­கள் வழங்­கப்­ப­டு­மாக இருந்­தால் அதனை இலஞ்­ச­மாக கரு­த­மு­டி­யாது. அப்­ப­டி­யா­னால் அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­டு­வ­தும் இலஞ்­மா­கவே கரு­தப்­ப­ட­வேண்­டும் என்று தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்­கம் மற்­றும் அர­ச­க­ரும மொழி­கள் அமைச்­சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார்.

சோச­லிச மக்­கள் முன்­னணி கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

கட்சி தாவு­தற்கு பெரு­ம­ளவு பணம் வழங்­கப்­ப­டு­வ­தாக ஆதா­ரங்­க­ளு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது. அரச தரப்பு அதனை மறுத்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அரச தரப்பு அமைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எமக்கு பெரும்­பான்­மைப் பலத்தை நிரூ­பிக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வை­யும் நாங்­கள் கோரி­யுள்­ளோம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­டன் இது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளில் எங்­க­ளால் நிறை­வேற்ற முடி­யு­மான விட­யங்­களை செய்­து­கொ­டுக்க தயா­ராக இருக்­கின்­றோம்.

பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டா­லும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யு­டன் தொடர்ப்­பு­பட்ட எவ­ரை­யும் எம்­மு­டன் இணைத்­துக் கொள்­ளப்­போ­வ­தில்லை – என்­றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad