விக்கியை உள்ளே எடுத்தால் நான் வெளியேறுவேன் - சுமந்திரன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 25, 2018

விக்கியை உள்ளே எடுத்தால் நான் வெளியேறுவேன் - சுமந்திரன்

முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு கூட்டமைப்பு மீளவும் சந்தர்ப்பம் வழங்கினால் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இக்கருத்தை தெரிவித்தார்.



அடுத்த மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் தற்போதைய முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டிய நிலை வந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுங்கிக்கொள்ளவேண்டிய நிலை தனக்கு ஏற்படும் எனவும் அதனை பொறுப்பான விதத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தெரிவித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துதெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடந்த தேர்தலின்போது தனது படங்களை தேர்தல் பரப்புரைகளின்போது பயன்படுத்தவேண்டாம் என தன்னை கேட்டுக்கொண்டதாகவும், இனிமேல் விக்கினேசுவரனோடு தன்னால் ஒத்துழைத்து செயற்படமுடியாது எனவும் கருத்து தெரிவித்தார்.

1 comment:

  1. I believe your assessment is correct. You have no place in this project. It is not a pan Tamil agenda to build a Tamil empire, it is not re. Tamil speaking people. It is a seprate state based on Hindu core values, comprising Jaffna, Wanni and Manner. At one stage or another it must come out. They can talk streight with the Buddhist hierarchy, sir, they don't need you. Otherwise Sinhalese will have to prepare for the next war. Like Israel they will survive from war to war.

    ReplyDelete

Post Bottom Ad