மகிந்த பிரதமராக பதவியேற்பு! மைத்திரி மகிந்தவோடு சேர்ந்தார்!? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, October 26, 2018

மகிந்த பிரதமராக பதவியேற்பு! மைத்திரி மகிந்தவோடு சேர்ந்தார்!?

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி  பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ளவில் அவர் பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார்.
நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வில­கு­வ­தற்கு நேற்று மாலை முடிவு செய்­தி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கூடிய முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் அர­சாங்­க­த்தி­லி­ருந்து வில­கு­வ­தற்கும் தீர்­மா­னித்­தனர். இத­னை­ய­டுத்தே முன்னாள் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ளார்.  
பிர­த­ம­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பத­வி­யேற்­றுள்ள நிலையில் புதிய  அமைச்­ச­ரவை இன்னும் சில தினங்­க­ளுக் குள் பத­வி­யேற்­க­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் புதிய அமைச்­ச­ரவை  தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். 
புதிய பிர­தமர் பத­வி­யேற்­றுள்ள நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் புதிய அர­சாங்­க­மா­னது பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டி­யுள்­ளது. பெரும்­பான்­மையை நிரூ­பித்தால் மட்­டுமே புதிய பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்கம் நீடிக்க முடியும். இதற்­கான நட­வ­டிக்­கைளில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.
இதே­வேளை முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்­றி­ரவு அவ­ச­ர­மா­கக்­கூடி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்­துள்­ளனர். அல­ரி­மா­ளி­கையில் நேற்­றி­ரவு 9.30 மணி­ய­ளவில் இந்­தக்­கூட்டம் ஆரம்­ப­மாகி நள்­ளி­ர­வு­வரை நடை­பெற்­றது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். கூட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதனையடுத்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.பிரதமராக தானே பதவியில் நீடிக்கின்றேன். அரசியல் யாப்புக்கு இணங்க நானே செயற்படுவேன் என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
 ஜனா­தி­பதி மைத்­திரிபால சிரி­சே­னவின் இல்­லத்தில் நேற்று மாலை அவரின் தலை­மையில் , அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு அமைச்­சர்­களின் கூட்டம் நடைப் பெற்­றது. இதில் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் 24 பேரும் கலந்­து­கொண்­ட­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர கூறினார்.
 இதன்­போதே அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­று­வது குறித்து ஏக­ம­ன­தாக தீர்­ம­னைக்­கப்­பட்டு அந்த தீர்­மானம் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­தாக அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.
 ஜனா­தி­பதி இல்­லத்தில் இடம்­பெற்ற விஷேட கூட்­டத்தின் போது, ஜனா­தி­ப­தியைக் கொலை செய்ய இடம்­பெறும் சதி முயற்சி குறித்தும் அதனை கண்­டு­கொள்­ளாமல் ஐக்­கிய தேசிய கட்சி நடந்­து­கொள்­வது தொடர்­பிலும் பல அமைச்­சர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இத­னை­விட நாட்டில் தொடர்ச்­சி­யாக பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி நிலைமை, அர­சாங்­கத்தின் முரண்­பா­டுகள், வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்பு உள்­ளிட்ட விட­யங்­களும் அது­சார்ந்த தீர்வுத் திட்­டங்­களின் போது ஐக்­கிய தேசிய கட்சி அமைச்­சர்கள் எதேச்­ச­தி­கா­ர­மாக செயற்­ப­டு­வது குறித்தும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அத­னை­விட நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்­களம் கூட ஜனா­தி­பதி விட­யத்தில் மாற்­ற­மாக செயற்­ப­டு­வ­தா­கவும் , பொலிஸ் துறை­யிலும் பாரிய குழப்ப நிலை நில­வு­வ­தா­கவும் இதன்­போது ஜனா­தி­ப­திக்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
 இந்த விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு விளக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்தி ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்­தை­விட்டு வெளி­யேற ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கினார்.
 அத­னை­ய­டுத்தே அது குறித்து சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­துடன், உட­ன­டி­யாக முன்னாள் ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்தே அவர் புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்றார்.
 புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்கும் போது மஹிந்த ராஜ­பக்ஷ , இலங்கை சோஷ­லிஷ ஜன­நா­யக குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­யவும் அதனை பாது­காக்கும் வண்­ணமும் செயற்­ப­டு­வ­தாக உறு­தி­ய­ளித்து சத்­தியப் பிர­மாணம் செய்தார். இத­னை­விட, நாட்­டுக்குள் வேறு ஒரு நாட்டை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளுக்கோ, அது குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கோ, நிதி வழங்கல் செயற்­பா­டு­க­ளுக்கோ நாட்­டுக்­குள்ளும் வெளி­யேயும் எந்­த­வ­கை­யிலும் உதவி ஒத்­தாசை செய்யப் போவ­தில்லை எனவும் சத்­தியப் பிர­மாணம் செய்தார்.
  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த புதிய பிர­த­ம­ராக பதவிப் பிர­மாணம் செய்யும் போது, அமைச்­சர்­க­ளான மஹிந்த அமர வீர, துமிந்த திஸா­நா­யக்க உள்­ளிட்­டோ­ருடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, தினேஷ் குண­வர்­தன, எஸ்.பி. திஸா­நா­யக்க, சுசில் பிரேம ஜயந்த, ஜனக பண்­டார தென்­னகோன் உள்­ளிட்ட பலரும் உட­னி­ருந்­தனர்.
 புதிய பிர­த­ம­ராக மஹிந்த பத­வி­யேற்­றதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யுடன் விஷேட சந்­திப்­பொன்று உட­ன­டி­யாக ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது புதிய அமைச்­ச­ரவை மற்றும் புதிய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை எப்­படி முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து விஷே­ட­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி செய­லக தக­வல்கள் கேச­ரிக்கு வெளிப்­ப­டுத்­தின. இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் பலர் உடனிருந்தனர்.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியிலேயே தற்போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியும் சுதந்திரக்கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றிருந்தது.
மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதுடன் புதிய அமைச்சரவையும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad