இன்றைய செய்திகள்
- "சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி சட்டவிரோதமானது" - மங்கள சமரவீர!
- ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் கால தேர்தல் தொடர்பான மனு தற்போதும் தீர்வுக்காக நிலுவையாக இருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்கால வரையறையை அகற்றுவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியானது சட்டவிரோதமானது என்றும் தார்மீகக் கோட்பாடற்றது என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
- "விசேட தூதர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறது இந்தியா" - "ரைம்ஸ் ஒப் இந்தியா"
- இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
- அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு - ஐ.தே.க. நடவடிக்கை தொடர்கிறது!
- உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன, ஏர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று அறிவித்தனர்.
- "ரணில் தலைவராக இருக்கும் வரைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது" - ஐ.தே.க. எம்.பி!
- ஜனநாயக சுதந்திரம் பற்றிப் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகதையே கிடையாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன கட்சியின் ஆயுள் காலத் தலைவராக பதவிவகிக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கும் அவர் எவ்வாறு ஜனநாயகம் பற்றிப் பேச முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
- இந்திய உயர்மட்டத்தின் இலங்கைக்கான பயணங்கள் தொடர்கின்றன!
- இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜயகுமார் சிங் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு பயணமாகிறார்.
- அரசியல் தீர்வு காண்பதற்கான தருணம் இலங்கைக்கு வந்துள்ளதாக நிருபமா தெரிவிப்பு!
- இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான தருணம் இலங்கைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், இந்த விடயத்தை இந்தியா எவ்வாறு அணுகிக் கொண்டிருக்கிறது அல்லது பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பது அவர்களுக்குத் (இலங்கை அரசு) தெரியும் என்று தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.
- பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சர் இன்று தமிழ் மக்களை சந்திக்கின்றார்! பெருமளவில் திரண்டுவருமாறு அழைப்பு!!
- பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சரும் தொழில் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டேவிட் மிலிபாண்ட் இன்று சனிக்கிழமை சந்திக்கின்றார். இவர் முன்னர் உலகத்தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். இதனால் சிறிலங்கா அரசு கடும் சீற்றமடைந்திருந்தது.
- Prabhakaran – the Zorro
- Prabhakaran – the Zorro
- "சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி" என்கிறார் மஹிந்த!
- அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.
- வட மாகாணசபைத் தேர்தல் ஜனவரியில் இல்லை!
- உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னரே வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராயவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- தமிழ் கூட்டமைப்பு, அரங்கம் தொடர்பில் நிருபமா கேள்வி!
- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. அப்படியிருந்தும் இருதரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்!
- அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோடியுள்ளனர்.
- இடம் பெயர் மக்களின் நிலை குறித்து நிருபமாவுக்கு விளக்கியது கூட்டமைப்பு!
- வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார்.
- தமிழீழ அரசவை இம்மாத இறுதியில் கூடுகிறது - முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார்
- தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை இம்மாத இறுதிப்பகுதியில் கூடி தமிழ் மக்களின் விடுதலை இலட்சியத்தை முன்னெடுக்ககூடிய காத்திரமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிவந்துகொண்டிருக்கும் அவதூறுகள் தொடர்பாகவும் விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
- "கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை" - யாழ்.மக்கள் முன் நிருபமா!
- கடந்தகாலத்தை மறந்து விட்டு எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் கூறுபவற்றை செவிமடுக்கவும் காயங்களை ஆற்றுப்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஈழநேசன் இணைய சஞ்சிகையிலிருந்து
- நிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)
- கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைத்தீவுக்கு சென்ற இந்தியாவின் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ்வின் நகர்வுகள் சிறிலங்கா வட்டாரத்தில் சில நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பூனையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்ட பெண் - தொடரும் சர்ச்சை
- கடந்த வாரம் இங்கு லண்டனில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தி 'றோட்டால் போகும் போது 45 வயது பெண்மணி ஒருவர் வீட்டு மதில் சுவரில் இருந்த பூனை ஒன்றை செவியில் தூக்கி பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போய்விட்டா' என்பதுதான். இது பி.பி.சியின் உலக சேவை வரை விஸ்தாரமாக்கப்பட்டிருந்தது. சும்மா நின்ற பூனையைத் தூக்கி ஏன் குப்பைத் தொட்டியில் அந்தப் பெண்மணி வீசினா என்பது பெரும் வாதமாகி விவாதமாகி பெரிய செய்தியாகி றொய்ட்டஸ் வரைக்கும் போய்விட்டது. ஸ்கை நியூஸ் 'கற் அற்றாக் (Cat attack)' என்று விசேட நியூஸ்.
- விண்வெளி வீரருக்கான உணவுகள்
- 1960 களிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப்புவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்ட போதிலும், விணவெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பொருத்தமான உணவினை தயார் செய்வதில் அவர்கள் சிக்கல்களையே எதிர்கொண்டனர்.