நித்திரையால் எழுந்தார்களாம் செல்வமும் சித்தார்த்தனும்! சுமந்திரன் சுத்துகிறாராம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, September 3, 2018

நித்திரையால் எழுந்தார்களாம் செல்வமும் சித்தார்த்தனும்! சுமந்திரன் சுத்துகிறாராம்!!

அதி­கார பர­வ­லாக்­கலை பிர­தா­னப்­ப­டுத்தி சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்பே தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமையும். சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பே வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டில் எந்­த­வித மாற்­றமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் உறு­தி­பட தெரி­வித்­தன . 



தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீற­மு­டி­யாது எனவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான டெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலை­வரும் எம்.பி. யுமான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் குறிப்­பிட்­டனர்.

நாட்­டுக்கு சமஷ்டி முறைமை தேவை­யில்லை என்ற கருத்­தினை அண்­மையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் சுமந்­திரன் எம்.பி தெரி­வித்­தி­ருந்த நிலையில் அவ­ரது கருத்தை வடக்கு முதல்வர் உள்­ளிட்ட தமிழர் தரப்­பினர் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றனர். இந்த நிலையில் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே இதனை குறிப்­பிட்­டனர்.

 தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான டெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் கூறு­கையில்,

எமது மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்­கான ஒரே தீர்வு அதி­கார பர­வ­லாக்கல் மூல­மாக ஒரு அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்­வ­தாகும். இது எமது கொள்கை என்­பதை விட எமது இலட்­சியம் என்ற கூற வேண்டும். எமது மக்கள் சுய­மாக தமது தீர்­மா­னங்­களை எடுக்­கவும், தடைகள் இல்­லாத கட்­டுப்­பா­டு­களோ வரம்­பு­களோ இல்­லாத அர­சியல் நகர்­வு­களை எமது பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்க எமக்கு சமஷ்டி அர­சியல் அமைப்பு அவ­சியம். அதனை இலக்­காக கொண்டே எமது தீர்­வுக்­கான பய­ணத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதில் தமிழ் மக்­களை திசை திருப்­பவோ அல்­லது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­தவோ எவ­ரேனும் முயற்­சித்தால் அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.

பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக நாம் எமது நிலைப்­பாட்டை உறு­தி­யாக முன்­வைத்து வரு­கின்றோம். எமது மக்கள் மத்­தி­யிலும் நாம் எமது கொள்­கையை உறு­தி­யாக முன்­வைத்து வரு­கின்றோம். அவ்­வாறு இருக்­கையில் சுமந்­திரன் எம்.பியின் கருத்­தினை கொண்டு நாம் எமது நிலைப்­பாட்டை மாற்­றி­கொள்­ளப்­போ­வ­தில்லை. சமஷ்டி அர­சியல் அமைப்­பினை பெற்­றுக்­கொள்­வதே எமது ஒரே இலக்­காகும், அந்த பாதையில் இருந்து நாம் ஒரு­போதும் விலகி நடக்­கப்­போ­வ­தில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­கக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் வரையில் நாம் எமது போராட்­டத்தை முன்­னெ­டுப்போம் என்றார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் அமைப்பின் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் இது குறித்து கூறு­கையில்,

சமஷ்டி என்ற வார்த்தைப் பதம் புதிய அர­சியல் அமைப்பில் இருக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் சுமந்­திரன் கூறி­ய­தாக செய்­தித்­தாள்­களில் படித்தேன். எனினும் அவர் உண்­மை­யாக எவ்­வா­றான கருத்­துக்­களை கூறினார் என நான் பார்க்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சமஷ்டி வேண்டாம் என்ற நிலை­பாட்டில் இருந்­த­தில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மிகத்­தெ­ளி­வாக சமஷ்டி அர­சியல் முறை­மையே தீர்வு என்­பதை கூறி­யுள்ளோம். கடந்த மாகா­ண­சபை தேர்­த­லிலும் சரி, பொதுத் தேர்­த­லிலும் நாம் எமது நிலைப்­பாடு என்ன என்­பதை தெளி­வாக கூறி­யுள்ளோம்.

அவ்­வாறு இருக்­கையில் இப்­போது சமஷ்டி வேண்டாம் என கூற சுமந்­தி­ர­னுக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை. அவ­ரது தனிப்­பட்ட கருத்துக்களை அல்லது தெளிவில்லாத கருத்துக்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என கூற முடியாது. தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தீர்வு சமஷ்டி அரசியல் அமைப்பில் தான் தங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நாம் உரையாற்றும் சகல சந்தர்ப்பங்களிலும் சமஷ்டி மட்டுமே தீர்வு என்ற கருத்தினை ஆழமாக முன்வைத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad