முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு கவிதைப்போட்டி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 9, 2019

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு கவிதைப்போட்டி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் உறவுகள் கலந்துகொள்ளக்கூடிய கவிதைப்போட்டி.

போட்டி விதிமுறைகள்:

போட்டிக்கான கவிதைகள் மரபுக்கவிதைகளாகவோ அல்லது புதுக்கவிதைகளாகவோ இருக்கலாம்.




கவிதையின் கரு தமிழர்களின் வலிகளை பிரதிபலிப்பதாக அல்லது நினைவேந்தலை மையப்படுத்தியதாக அல்லது தமிழர்களின் உரிமைக்கான குரலாக அமையலாம்.

கவிதைகள் பொருத்தமான தலைப்பிடப்பட்டு 20 – 30 வரிகளுக்கு உட்பட்டதாக அமைவதுடன் ஒவ்வொரு வரியும் 4-5 சொற்களை கொண்டதாக அமைதல் வேண்டும்.

போட்டிக்கான ஆக்கங்கள் அனைத்தும் கையெழுத்து பிரதியாகவோ யுனிக்கோட் எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்.

அனைத்து ஆக்கங்களும் s.t.v.bala@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது என்ற +94772363527 வைபர் அல்லது வட்சப் இலக்கத்திற்கு அனுப்பப்படல் வேண்டும்.

கவிதைகள் அனுப்பப்படும்போது, தங்களது முழுப்பெயர் முகவரி தொலைபேசி இல என்பவற்றை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.

கவிதைகள் அனுப்பவேண்டிய முடிவுத்திகதி: 10 – 05 – 2019 வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணி வரை
தரமான ஆக்கங்கள் அனைத்தும் நூலுரு வடிவில் தொகுத்து வெளியிடப்படும்.

பரிசு விபரம்
1. முதலாவது பரிசு – 10000 இலங்கை ரூபா
2. இரண்டாவது பரிசு – 5000 இலங்கை ரூபா
3. மூன்றாவது பரிசு – 3000 இலங்கை ரூபா
4. ஊக்குவிப்பு பரிசு (10) - தலா 1000 இலங்கை ரூபா

நிதி அநுசரணை: அவுஸ்திரேலிய தமிழ் உறவுகள்

கலைபண்பாட்டுத்துறை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி




No comments:

Post a Comment

Post Bottom Ad