கைப்பைக்கு ஏற்பட்ட நிலையை சந்திரிகா மறக்ககூடாது! நாடாளுமன்றம் கலைக்கவேபடாது!! மைத்திரி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, November 9, 2018

கைப்பைக்கு ஏற்பட்ட நிலையை சந்திரிகா மறக்ககூடாது! நாடாளுமன்றம் கலைக்கவேபடாது!! மைத்திரி

பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் தொடர்ந்தும் முன்­கொண்டு செல்­லப்­படும். எமக்கு போதி­ய­ளவு பெரும்­பான்மை உள்­ளது. இந்த விட­யத்தில் எவரும் அச் சம் கொள்ளத் தேவை­யில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். 
பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் உத்­தேசம் எனக்­கில்லை. அது குறித்து நான் சிந்­திக்­க­வில்லை. மஹிந்­த­வு டன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்­பாட்டை மேற்­கொள்வோம். அர­சாங்­கத்தை முன்­னெ­டுப்போம். இந்த விட­யத்தில் ஏதா­வது பிரச்­சி னைகள் ஏற்­ப­டு­மாக இருந்தால் அதற் கும் மாற்றுத் திட்­டத்தை  நான் வைத்­துள்ளேன். அதன்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அவர் கூறி­யுள்ளார். 
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் நேற்று மாலை பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள அபே­கம கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது,
அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்ற வகை­யி­லேயே நான் பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­ப­க்ஷவை நிய­மித்­துள்ளேன். அவ­ரது தலை­மை­யி­லேயே தொடர்ந்தும் ஆட்சி முன்­னெ­டுக்­கப்­படும். அதற்­கான பெரும்­பான்மை எம்­மிடம் உள்­ளது. இந்த விட­யத்தில் ஏதா­வது பிரச்­சினை ஏற்­ப­டு­மானால், அதற்­கான மாற்றுத் திட்டம் என்­னிடம் உள்­ளது. இதனால், எவரும் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை. எமது ஆட்­சிதான் தொடர்ந்தும் நடை­பெறும்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் மீண்டும் உரு­வாகும் என்று கூறப்­படும் கதை­களை எவரும் நம்பத் தேவை­யில்லை. அவ்­வா­றான நிலை ஏற்­ப­ட­மாட்­டாது. 14ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்­ட­வுள்ளேன். பிர­த­ம­ராக தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க்ஷவே செயற்­ப­டுவார். அதில் எத்­த­கைய மாற்­றமும் ஏற்­படப் போவ­தில்லை.
புதிய அர­சாங்­கத்தின் உரு­வாக்கும் விடயம் தொடர்பில் நான் நிபு­ணர்­க­ளுடன் ஆராய்ந்தே நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். பல தரப்­பு­டனும் கலந்­து­ரை­யா­டியே இந்த முடி­வினை எடுத்­துள்ளேன். பாரா­ளு­மன்­றத்தை நான் கலைக்க போவ­தாக கூறப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மன ரீதியில் கூட நான் அவ்­வாறு சிந்­திக்­க­வில்லை.
பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படப் போவ­தாக செய்­திகள் வெ ளியா­னதை அடுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளம் எம்.பி.க்கள் பலர் என்­னுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் கேட்­டுள்­ளனர். தற்­போது பாரா­ளு­மன்­றத்தை கலைத்தால் அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் கிடைக்­காமல் போய்­விடும் இத­னால்தான் அவர்கள் என்­னுடன் சந்­திப்பு மேற்­கொள்­வ­தற்கு முயன்று வரு­கின்­றனர். அவர்­களை சந்­தித்து நான் பேச­வுள்ளேன்.
2002ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்­த­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க கூட்­டங்­களின் போது தனது கைப்­பை­யைக்­கூட கொண்டு செல்ல முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. கைப்­பைக்குள் குண்டு கொண்டு வரு­வ­தாக அன்று அர­சாங்கத் தரப்­பினால் குற்றம் சாட்­டப்­பட்­டது. இவ்­வா­றான நிலை­மையை மறந்து தற்­போது சந்­தி­ரிகா குமா­ர­துங்க செயற்­பட்டு வரு­கின்றார்.
மஹிந்­த­வுடன் இணைந்து நாம் எமது பய­ணத்தை முன்­னெ­டுப்போம். எமது ஆட்சி தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும். ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து புதிய வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுப்போம்.
பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­படும். இந்த விட­யத்தில் பிரச்­சினை எழு­மானால் என்­னிடம் மாற்றுத் திட்டம் உள்­ளது. அந்த திட்­டத்தை நான் முன்­னெ­டுப்பேன். எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. நிம்மதியாக நீங்கள் நித்திரை கொள்ளலாம். நானும் நிம்மதியாக நித்திரை கொள்வேன் என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்தமாற்றங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்தார்.இதற்கு எகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad