பெரும்­பான்­மையை நிரூ­பிப்­பதில் ரணில் தோல்வி! 112 பேரே வந்தனர்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, November 3, 2018

பெரும்­பான்­மையை நிரூ­பிப்­பதில் ரணில் தோல்வி! 112 பேரே வந்தனர்!!

ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு பெரும்­பான்மை ஆத­ரவு இல்லை என்­பது உறு­தி­யாக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தந்­தி­ருந்­தி­ருந்த ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­களின் எண்­ணி­க்கையினூடாக இவ்­வி­டயம் வெளிப்­பட்­டுள்­ளது என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்பில் அக்­கட்சி நேற்று வெளியிட்ட அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் தற்­போது 98 உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் அறுதிப் பெரும்­பான்மை ஆத­ர­வைப் பெற வேண்­டு­மாயின் 113 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு கிடைக்கப் பெற வேண்டும். இருப்­பினும் நேற்­றைய தினம் அனைத்துக் கட்­சி­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்தி 112 உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே வருகை தந்­தி­ருந்­தனர். 
நேற்று பாரா­ளு­மன்­றத்­துக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் 98 உறுப்­பி­னர்­களும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 12 உறுப்­பி­னர்­களும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் 2 உறுப்­பி­னர்­களும் வருைக தந்­தி­ருந்­தனர். இத­ன­டிப்­ப­டையில் தனது பெரும்­பான்மை பலத்­தை முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க உறு­திப்­ப­டுத்தத் தவறி விட்டார் என்­பது தெளி­வாக்­கப்­பட்­டுள்­ளது.
வருகை தந்­தி­ருந்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் இரு­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 12 பேரு­மாக மொத்தம் 14 பேரும் பாரா­ளு­மன்­றத்­தை விரைவில் கூட்டுங்கள் என்று குறிப்பிட்டார்களே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்குகின்றோம் என்று இதுவரை குறிப்பிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad