கிளிநொச்சியில் அழிக்கப்பட்ட ஈழம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 29, 2018

கிளிநொச்சியில் அழிக்கப்பட்ட ஈழம்!!

கிளிநொச்சியில் ஈழம் என்ற பெயர் அழிக்கப்பட்டு சிறிலங்கா ஆக்கப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத பிரிவினரின் விசாரணையின் பின் அழிக்கப்பட்டு சிறிலங்கா என எழுதப்பட்டுள்ளது
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,
திருவள்ளுவரின் திருக்குறல் உலக பொது மறை என்பதனால் திருவள்ளுவரின் சிலையை உலகத்தின் மீது இருப்பது போன்று சிலை தாங்கியை வடிவமைக்க கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் தீர்மானித்து அதன்படி உலக நாடுகள்,கண்டங்கள்,சமூத்திரங்கள் பெயர்கள் எழுதப்பட்டு சிலை தாங்கியும் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் இலங்கையை அதன் மற்றொரு பெயரான ஈழம் என எழுதப்பட்டு அடைப்புக்குறிக்குள் இலங்கை என எழதப்பட்டிருந்தது.
இதுவே பயங்கரவாத தடுப்பு பிரிவினரிக்கு சர்ச்சையாக காணப்பட்டது.
அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழமை கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவா் இறைபிள்ளை மற்றும் கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்
இதனையடுத்து கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவா் இறைபிள்ளையை தொடர்பு கொண்டு வினவிய பொழுது பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகளின் பின் தமிழ்ச் சங்கத்தின் செயற்ப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக அதனை அழித்ததாக தெரிவித்தார்
இந்தச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடவிதானங்களில் கூட இலங்கையின் மறுபெயர்களில் ஒன்றாக ஈழம் குறிப்பிடப்பட்டு்ளளது.
அத்தோடு காரைநகா் சிவன் கோவிலை ஈழத்துச் சிதரம்பரம் என்றே அழைக்கின்றாா்கள், தேவாரம்ங்கள், காப்பியங்கள் முதல் பல்வேறு சமய மற்றும் இலக்கியங்களில் ஈழம் என்ற சொல் தொன்று தொட்டு குறிப்பிடபட்டு வருகிறது.
இதனைதவிர தற்போது வடக்கில் ஈழம், தமிழீழம் எனும் சொற்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற பல அரசியல் கட்சிகள் சட்ட ரீதியாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளுவா் சிலையில் உள்ள பீடத்தில் இலங்கைக்கு எழுதப்பட்ட ஈழத்தை அழிக்க அறிவித்த பயங்கரவாத பிரிவினரையும் அதனை கேட்டு உடனடியாக அழித்த தமிழ்ச் சங்கத்தின் மீது மக்கள் விசனம் அடைந்துள்ளனா்.
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பின் பெயரில் ஈழம் அழிக்கப்பட்டு மீண்டும் எழுதப்பட்டிருந்தது அதுவே நேற்றையதினம் அழிக்கப்பட்டு அதற்குப்பதிலாக சிறிலங்கா என மாற்றப்பட்டுள்ளது
கரைச்சிப் பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள இவ் திருவள்ளுவர் சிலைக்கு கீழ் உள்ள ஈழம் எனும் சொல் அழிக்கப்பட்டமை தொடர்பில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவிய பொழுது அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment

Post Bottom Ad